தீபாவளியை முன்னிட்டு வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் அணுசரனையுடன் செல்வி அணியினர் நடாத்திய மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அசத்தல் அணி சம்பியன் பட்டம் வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 131 ஓட்டத்தை பெற்றுது. இதில் மிகவும் அபாரமாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரதீபன் 94 ஓட்டத்தைப் பெற்றார். 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அசத்தல் அணி 11 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. இதில் ரொஷான் , ஜெகநாத் ஆகியோர் சிறப்பாக துடுப்பெத்தாடினர். போட்டியின் ஆட்ட நாயகனாக பிரதீபன் தெரிவு செய்யபட்டார்.தொடர் ஆட்ட நாயகனாக ரொஷான் தெரிவானார். |
நிகழ்வுகள் >