2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு கடந்த 15.09.2011 அன்று வெளியிடப்பட்டது . இதில் வீரமுனை இராம கிஸ்ன மிஷன் பாடசாலையின் சார்பாக தோற்றிய மாணவர்களில் நான்கு பேர் சித்தி பெற்றுள்ளனர். இதே வேளை வெளியிட பாடசாலை சார்பாக தோற்றிய மாணவர்களில் நான்கு பேர் சித்தி பெற்று மொத்தமாக 8 மாணவர்கள் வீரமுனையில் புலமைப் பரிசிலில் பரீட்சையில் சித்த பெற்றுள்ளனர் . சித்தி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு வீரமுனை இராம கிஸ்ன மிஷன் பாடசாலை சார்பாக தோற்றிய மாணவர்கள் 01.மதன் பவிலக்சன் 02.நாராயணபிள்ளை சுவாணு 03.சந்திரன் வினுக்சன் 04.அகிலன் ருசாணி அம்பாறை மாவட்டத்துக்கான வெட்டுப் புள்ளி 151 ஆக இருந்த போதும் 16 பேர் 130 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ள அதேவேளை 100 புள்ளிகளுக்கு மேல் 21 பெற்றுள்ளனர். வெளியிட பாடசாலை சார்பாக தோற்றிய மாணவர்கள் 01. சிவசுந்தரமூர்த்தி அக்சயா 02. கருணாகரன் கஜமுகவர்சன் 03. உதயகுமார் சகானா 04. சுகிர்தராஜன் மிதுஷா |
நிகழ்வுகள் >