![]() இவர் தமது கடமைகளை நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு பிரதி தபால் மா அதிபர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் தபால் அத்தியட்சகர் அலுவலக பிரிவுகளுக்கான நுண்ணாய்வு பரிசோதகராகவும் கிழக்கு மாகாண பிரதேச நிர்வாக உத்தியோகஸ்தராகவும் கடமையாற்றி பின்பு நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி வெற்றிடங்கள் இன்மையால் உடனடியாக செயற்படும் வகையில் வவுனியா மாவட்ட பிரதேச தபால் அத்தியட்சகராகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பதில் கடமை உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வந்துள்ள நிலையிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 1981ம் ஆண்டு தபாலதிபராக இணைந்து கொண்ட இவர் சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை ஆகிய தபாலகங்களின் பிரதம தபால் அதிபராகவும் 1994ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு தபாலதிபர்கள் பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரியாவார். |
நிகழ்வுகள் >