சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வீரமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா அரசரெட்ணம் (வயது-56) தனது சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ள நிலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலையில் வாழ்ந்துவருகின்றார். இவர் கடந்த காலங்களில் வீரமுனை வழிபாட்டு பிள்ளையார் ஆலயம், வீரமுனை கண்ணகை அம்மன் ஆலய பூசகராக கொடுப்பனவுகள் ஏதுமின்றி தொண்டாக கடமை புரிந்த பூசகராவார். வீரமுனை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற இவர் இரண்டு பெண் மக்களின் தந்தையும் ஆவார். இந் நிலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்கைக்கு அதிகளவான நிதி தேவைப்படுவதனால் அந் நிதியை திரட்ட முடியாதுள்ளமையினால் கருணை உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து சிறுநீரக தானமோ அல்லது பண உதவியையோ எதிர்பார்த்துள்ளார். எனவே மேற்படி உதவிகளை புரிய விரும்பும் கருணை உள்ளம் கொண்டவர்கள் மேற்படி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். பெயர்: இராசையா அரசரெட்ணம் தொலைபேசி: 0775154572 இரத்தவகை: O+ / B+ வங்கிக் கணக்கு விபரம்: கணக்கு இல: 5687437 இலங்கை வங்கி-சம்மாந்துறை |
நிகழ்வுகள் >