சுடர் ஒளி பத்திரிகை நிறுவனத்தின் புலமைச் சுடர் ஊடாக தரம் 05 மாணவர்களுக்கு தேசிய ரீதியில் தமிழ் மொழி மூலமான மாணவர்களின் வெற்றிக்கு வினாப் பத்திரங்களை தயாரித்த பல முன்னணி ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (07.04.2012) கொழும்பு வெள்ளவத்தை chetttinad Restaurant இல் இடம்பெற்றது. இதில் தேசிய ரீதியில் முன்னணியிலுள்ள மூத்த ஆசான்களான அம்பிகைபாகன், புண்ணியாமின், அன்பழகன் ஆகியரோடு வீரமுனையை சேர்ந்த பூ . பரமதயாளன் ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூடமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கலந்து சிறப்பித்தர். இவருக்கு எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். |
நிகழ்வுகள் >