வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் நேற்று (24.11.2013) சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் இல்ல மாணவர்களின் வில்லுப்பாட்டு மற்றும் சிறப்பு பஜனை இடம்பெற்றது. இதனை தொடர்ந்து ஆறுமுக நாவலர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய சேவைகள், அவர்கள் இன்றும் பூசிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றிய பேச்சுக்களும் இடம்பெற்றன. படங்கள்: கிருஷ்ணபிள்ளை சுதர்சன் |
நிகழ்வுகள் >