அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் ஜய வருஷ கேதார கௌரி விரதம் கடந்த 03/10/2014 வெள்ளிக் கிழமை ஆரம்பமானது. இவ் விரதமானது தொடர்ந்து 21 தினங்கள் நடைபெற்று ஐப்பசி மாதம் ஆறாம் நாள் (23/10/2014) வியாழக் கிழமை அமாவாசை தினத்தன்று நிறைவு பெறும். ஆலயத்தில் வழமைபோல நூற்றுக்கு மேற்பட்ட அடியவர்கள் விரதம் அனுட்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. படங்கள்: கோணேசமூர்த்தி சுஜான் |
நிகழ்வுகள் >