ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 5ஆம் நாளாகிய நேற்று (09/07/2013) விசேடமாக சுமங்கலி பூசை இடம்பெற்றதொடு வழமை போன்று வசந்த மண்டப பூசை, கொடி தம்பத்திற்கான விசேட பூசைகளும் திருஞானசம்பந்தர் அறநெறி மாணவர்களின் சமய சொற்பொழிவும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருதலும் இடம்பெற்றது. மேலும் நாளை தீர்தகேனியில் தெற்பத்திருவிழா இடம்பெறவுள்ளது Photos: Santhiramohan Sanjeev Videos: Krishanapillai Sutharsan |
நிகழ்வுகள் >