வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர மகோற்சவமானது இன்று (10.06.2010) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சுவாமி உள் வீதி , வெளி வீதி வலம்வருதலுடன் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் தொடர்ச்சியாக வசந்த மண்டப சிறப்பு பூசைகள் இடம் பெற்று 16.06.2010 அன்று வேட்டைத் திருவிழாவும் 17 ம் திகதி இரவு 7.00மணிக்கு சப்பிரத் திருவழாவும் (18.06.2010) அன்று எம்பெருமான் அடியார்களுக்கு தேரில் ஏறி அருள்பாலிக்கின்ற அற்புத நிகழ்வும் இடம் பெற இருக்கின்றது என்பதனை அறியத்தருகின்றோம். Photos By: Vimalachandran & Paramathayalan |
நிகழ்வுகள் >