அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் நான்காம் நாளான இன்று (18.06.2015) தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா சிறப்பாக இடம்பெற்றதுடன் மதிய பூசையினைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் பேச்சு மற்றும் சமய சொற்பொழிவு இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து விசேட பூசையாக சர்வாஞ்சலி பூசை சிறப்பாக இடம்பெற்றது. |
நிகழ்வுகள் >