வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய நேற்று (24/06/2015) புதன்கிழமை தீர்தோற்சவம் இடம்பெற்றது. விசேட கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசையினைத் தொடர்ந்து மஞ்சள் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்று யானையிலே அங்குசம் எடுத்துச்செல்லப்பட்டு தீர்தோற்சவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா மற்றும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் மாலை 6.00 மணிக்கு திரு ஊஞ்சல் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து கொடியிறக்கம், சண்டேஸ்வரர் பூசை மற்றும் ஆச்சாரியார் உற்சவம் என்பன இடம்பெற்றன. மேலும் படங்களுக்கு கீழே அழுத்தவும் |
நிகழ்வுகள் >