வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலையின் ஏற்பாட்டில் காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினரால் திருவாசகம் முற்றோதல் நிகழ்வானது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11.01.2015) சிறப்பாக இடம்பெற்றது. சிறப்பு பூசை வழிபாடுகளினை தொடர்ந்து வீதியுலா இடம்பெற்ற பின்னர் நந்திக் கொடி ஏற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடந்து ஓதுவார்களால் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்றது. |
நிகழ்வுகள் >