சது/வீரமுனை இ.கி.மி பாடசாலையின் தரம் 1 இற்கான மாணவர்களை வரவேற்கும் "புதுமுக புகுவிழா" இன்று (18/01/2012) பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது புதிதாக வருகை தந்த தரம் 1 மாணவர்களை தரம் 2 மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். இவ் வரவேற்பு நிகழ்வினைத் தொடர்ந்து பிரதி அதிபர் S.ரகுநாதன், அதிபர் S.சந்திரமோகன் மற்றும் சம்மாந்துறை மக்கள் வங்கி பிரதி முகாமையாளர் ஆகியோர் உரையாற்றினர். இதன் போது மக்கள் வங்கியில் புதிதாக கணக்கு ஒன்றை ஆரம்பிப்பவர்களுக்கு மக்கள் வங்கியினால் ரூபா 500/- இலவசமாக வைப்பில் இடப்பட்டது. |
நிகழ்வுகள் >