ஒவ்வொரு முறையும் கவிதை எழுதிய கையோடு உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன், நீ படித்த பிறகு தான் என் கவிதைகள் முழுமையடைகின்றன. ![]() உன் இதயச் சிறையில் என்னை ஆயுள் கைதியாக்கு உணவாய் உனது காதலை மட்டும் கொடு உன்னை நினைத்துக் கொண்டிருக்கும் வேலையையும் சேர்த்தே கொடு. அதை இரட்டை ஆயுள் தண்டனையாக்க நானே கடவுளிடம் மனுக் கொடுக்கிறேன். ![]() உன்னை அவ்வளவு எளிதாக மனைவியாய் ஆக்கி விட மாட்டேன் இன்னும் கொஞ்ச நாள் எனது காதல் கொடுமையை அனுபவிக்கும் அன்பானக் காதலியாய் இரு. ![]() நீ செய்யும் எல்லாச் செயல்களிலும் எனக்குள் ஒரு கவிதை பிறக்கும் உனக்கும் கவிதைக்கும் அப்படி என்ன பந்தம்? ![]() உன் விரல்களால் வண்ணம் தீட்டுவதாக இருந்தால், நிலாக் கூட வண்ணமாய் மாறக் கூடும். ![]() எத்தனையோ பெண்களுக்கு அழகி என்கின்ற திமிர் உனக்கு மட்டும் அழகே உனது திமிர் தான். ![]() எனது கனவுகளையும், கவிதைகளையும் முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டாய் எனக்குள் காதல் பிறந்து விட்டதா இல்லை நீயே காதலாய் பிறந்து விட்டாயா? ![]() உனது கன்னத்தில் முத்தமிடுவதை விட உன்னை என் கவிதையில் முத்தமிடுவதையே நான் அதிகம் நேசிக்கின்றேன். ![]() பட்டும் படாமலும் என்னைக் கட்டி அணைத்தாய்! என்னிடம் இதுவரை யாருமே நுகர்ந்திடாத வாசனைத் திரவியம் என்று ஊரே மெச்சியது. ![]() உன் குடும்பத்தினர் மீது எனக்கு கொள்ளைப் பொறாமை, எப்படி முடிகிறது அவர்களால் மட்டும் கண் கூசாமல் உன்னைப் பார்க்க? ![]() என்னை எவ்வளவு பிடிக்கும் என்று அடிக்கடி கேட்கிறாய் சொல்லத் தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் உன்னைப் பிடித்த அளவுக்கு வேறு எதையும் எனக்குப் பிடிப்பதில்லை.. |
கவிதைகள் >