ஒளிரும் கண்கள் மின்மினி உந்தன் குரலோ கிண்கிணி அருகில் வா! என் பெண்மணி! மாலை சூட தலைகுனி! நீயும் நானும் தனித்தனி இல்லை இனிமேல் எனக்கு நீ! தின்னத் தெவிட்டா முக்கனி! அணியும் ஆடை தாவணி! அறிவில் நீயோ கலைவாணி! அன்புக்கே நீ அடிபணி! ஆணவத்தை எதிர்க்கத் துணி! என்னைப் பிடித்த கிரகம் சனி! என்னை விட்டு விலகும் இனி! உந்தன்முன் நான் உருகும்பனி! உன்னைக் காப்பதே என்பணி! |
கவிதைகள் >