எனக்கே என்னை ஞாபகமில்லை- என் நினைவு பூராவும் உடம்பு பூராவும்-உன் ஞாபகம்- என்ற போர்வையால் போர்த்தப்பட்டுள்ளேன். பெண்ணே உன்னை- இல்லை.. என்னை ஊடுருவிய- அந்த விகாசம்- மிகுந்த விழிகளுக்குள் கைதியான-நாளை மறக்க முடியுமா? இதயத்துக்குள்- இவ்வளவு இந்திர ஜாலமா? என் விண்ணப்பத்தை- ஏற்ற விண்மணியல்லவா நீ? சரித்திரமாக்கப்பட்ட சந்தோஷத்தின் காதலர் தினமே- நீயே காவியத் தலைவன். அஞ்சுகமே- உன் ஆன்மாவுக்குள்- என் பருவம்- என்ற விதை விருட்சமாகி இல்லறத்தில் இணைந்த இந்நாளை மறக்க முடியுமா? நம்முள் அடைக்கலாமான-ஒரே அன்பளிப்பை ஆனந்தக் கண்ணீருடன் அர்ப்பணித்துக் கொண்டோமே இறுதியில் சொல்கிறேன். நம் காதல் வாழ்க்கை சருகுகள் அல்ல.. சத்தியத்தின் திறவுகோள். மதியே- உன் அன்பென்ற ஆளுமையில் காலம் காலாவதியானது தெரியவில்லையே? இளமை விடைகொடுக்க முதுமைக்கு கிடைத்த அழைப்பிதழ.;. அதனால்தானோ- உன் அத்தியாயம் கல்லறைக்குள் அடைக்கலமானதோ? இதோ- இந்த காதலர் தினத்தில் நீ- தந்த இதயத்தையும்- என் கண்ணீhத் துளிகளையும் -உன் கல்லறையில் காணிக்கையாக்குகிறேன். |
கவிதைகள் >